என்னால நார்மலா இருக்க முடியல பிக்பாஸ்! என்னைய வீட்டுக்கு அனுப்புங்க! கதறி அழும் லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலியாரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரது பிரிவு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஆனால், இதில் இருந்து மீளா துயரினால், மிகவும் வருத்தத்துடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் லொஸ்லியா. இதனையடுத்து, லொஸ்லியா பிக்பாஸிடம் என்னால நார்மலா இருக்க முடியல. மத்தவங்கள போல டாஸ்க்குல விளையாட முடியல. அதனால என்னைய வீட்டுக்கு அனுப்புங்க என்று கதறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.