படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுதுபோக்கு : நடிகை சாய் தன்ஷிகா

நடிகை சாய் தன்ஷிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் திருடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சாய் தன்ஷிகா நடிகை மட்டுமல்லாது, ஒரு இயற்கை ஆர்வலரும் கூட. இது குறித்து அவர் கூறுகையில், ‘படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுது போக்கு. எனது வீட்டிலும் மாடி தோட்டம் அமைத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாடி தோட்டத்தை பராமரிப்பது நான் தான்’. என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.