கனவோடு மும்பை..இக்கட்டத்தில் சென்னை! இன்று CSKvMI விறுவிறு…

ஐபிஎல்2020 தொடரின் 41வது லீக் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அசுர பலத்தோடு iplஎதிரணியை துவம்சம் செய்து விளையாடி வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் சென்னை அணி –  மும்பை அணிகள்  மோதவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்குள் நுழைவது உறுதி என்ற எண்ணத்தோடு மும்பையும், இறுதி வாய்ப்பின் விழிம்பில் உள்ளோம் என்ற விழிப்போடு சென்னை அணியும் களமிரங்குகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோற்றால் இந்தப் போட்டியே இறுதி போட்டி அமையும்.இனி அடுத்தாண்டு தான் சென்னை அணி களமிறங்கும்.

சென்னை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இன்றைய ஈபில் போட்டியில் கேப்டன் தோனி இளம் வீரர்களை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், எதிர்தரப்பில் மும்பை அசுர பலத்தோடு களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்மிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
kavitha