SDPI மாநில தலைவர் நேரில் ஆறுதல் – முதல்வர் ட்விட்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவால் அக்13ந்தேதி காலமானார். அவருடைய உடல் சொந்தரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல்வரின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் முதல்வரை நேரில் சந்தித்தும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று SDPI மாநில தலைவர் நேரில் ஆறுதல் தெரிவித்தாக முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் SDPI கட்சி மாநில தலைவர் திரு.நெல்லை முபாரக், தேசிய துணைத்தலைவர் திரு.தெகலான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் திரு.அச உமர்பாரூக், மாநில செயலாளர் திரு.அமீர்ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏகே கரீம், மாவட்ட நிர்வாகிகள், மறைவெய்திய எனது தாயாருக்கு மரியாதை செலுத்தி ஆறுதல் கூறினர் என்று  தெரிவித்துள்ளார்.

 முதல்வர் பழனிச்சாமியின் ட்வீட்:
author avatar
kavitha