மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர், ‘ மோடி சீதாப்பழ குல்பி’ என்ற ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த ஐஸ்கிரீமில் பிரதமர் நரேந்திர மோடியின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக குல்பி வரும் 30 தேதி வரை மட்டுமே கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த ஐஸ்கிரீம் வியாபாரி பாஜக ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.