29 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது மோடி அரசு…! அடிமை அதிமுக! – ஜோதிமணி எம்.பி

ஒரு நாளாவது ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று சொல்வதற்கு தைரியம் வருவதில்லை ஜோதிமணி எம்.பி ட்வீட்.

கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு நாளாவது ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று சொல்வதற்கு தைரியம் வருவதில்லை. 29 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளது மோடி அரசு. அடிமை அதிமுக!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.