ஊட்டியில் கருணாநிதி சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

ஊட்டியில் கருணாநிதி சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன்பின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், முதல்வராக இருந்து தமிழகத்தை வளர்த்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு, கருணாநிதி செய்த நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு பேசியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.