மிசோராம்- மத்தியப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல்…! மாலை 6 மணி நிலவரம் …!

மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயகக் கடமை ஆற்றினார்கள்.

மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் ஒரேகட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் இரண்டு மாநிலங்களிலும் மக்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் மிசோராம் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 71% வாக்குப்பதிவாகியுள்ளது.அதேபோல் மத்தியப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.61% வாக்குப்பதிவாகியுள்ளது.

Leave a Comment