ஜூன் மாதத்திற்குள் வடிகால் பணிகள் முழுதாக முடிந்துவிடும்.! – அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி.!

தேக்கம் அடைந்துள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

நெல்லையில் நடைபெற்று வரும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன நடக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தார். பின்னர் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘ ஜூன் மாதத்திற்குள் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும்’ என தெரிவித்தார்.

தேக்கம் அடைந்துள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் எனவும், இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment