சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது-அமைச்சர் வேலுமணி

சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில்  அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும்.சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை அரசு சமாளிக்கிறது.
198 நாட்கள் மழை பொழியவில்லை, தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் கூறவில்லை .காவிரி, கிருஷ்ணா போன்ற அணைகளில் இருந்து நீர் கேட்டு வருகிறோம் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.