200 இடஙக்ளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதன் மூலம் 89,000 பேர் பயன்பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அவை இன்னும் அதிகரிக்கப்படும். – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் எழுகிறது
இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இதுவரை 200 இடஙக்ளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதன் மூலம் 89,000 பேர் பயன்பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அவை இன்னும் அதிகரிக்கப்படும். ‘ என தெரிவித்தார்.
மேலும், கடந்த வருடம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால், தற்போது அதுபோல இல்லை. மழைநீர் வேகமாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.