50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது தமிழகத்தில் மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 20,000 பேருக்கு ஆணை வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது.

என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கபடுகிறது. 15 மாதங்களில் மொத்தம் ஒன்றரை இலவச மின் இணைப்புகள், மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவதன் மூலம் என் மணமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள். இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது. ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போகிறவர்கள் அல்ல, செயல்படுத்தும் அரசு தமிழ்நாடு அரசு. முடியாது என சொல்வதை முடித்து காட்டுவது திமுக அரசு.

இலவச மின் இணைப்பு திட்டத்தில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 34,867 மெகாவாட், 2030 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மின் உற்பத்தி திறன் 65,360 மெகாவாட்டாக உயரும். மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆட்சி இருந்தது. அவர்கள் கொடுத்தது வெறும் 2 லட்சம் மின் இணைப்பு தான் என தெரிவித்தார்.

ஆனால் நாங்கள் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்தோம். எங்கள் நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறோம் எனவும் கூறினார். மேலும், தொழிற்துறையில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களின் பொருளாதார வலிமை கூடியுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி குறைவாக உள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment