மேகதாது அணை விவகாரம்…..நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக M.P-க்கள் ஆர்ப்பாட்டம்…!!

மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்க  வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக மாநில எம்.பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கியது முதல் மேகதாது அணை விவகாரத்தை  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணை தொடர்பாக எழுதிய பதாகையை  ஏந்தி, தமிழக அதிமுக எம்.பி.க்களும் ,  கர்நாடக மாநில எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் , மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு இன்று கர்நாடக மாநில எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணையில் தங்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment