பெண் ஒருவரின் செல்போன் நம்பரை லோகோண்டா இணைய தளத்தில் பதிவிட்டவர் கைது!

லோகோண்டா எனும் இணையத்தளத்தில் பெண்ணின் செல்போன் நம்பரை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தரமணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை லோகோண்டா என்ற இணைய தளத்தில் பதிவிட்டு, அவரை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த புலன் விசாரணையில் லோகோண்டா இணையதள தொடர்பு கொண்டு பெண்ணை பற்றி ஆபாசமாக பதிவிடுவது குறித்த தகவல்களை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சென்னை தரமணியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மகன் சூரிய நாராயணனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையதளங்களில் ஆபாசமாக இதுபோன்று பதிவு போடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

author avatar
Rebekal