எடப்பாடியை கண்டா வரச்சொல்லுங்க.! முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு.!

மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேடையில் குறிப்பிட்டுள்ளார். 

இன்று அதிமுக சார்பில் விருதுநகரில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக பற்றி சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதே போல, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், ‘ மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். அது விரைவில் தீர போகிறது. இன்னும் 18 மாதங்கள் தான் 2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும். அதில் கண்டிப்பாக அதிமுக வெற்றிபெறும்.

மக்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் அப்போது சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளை அதிமுக கைப்பற்றும். கடைநிலை தொண்டனுக்கும் அதிகாரம் வழங்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். ‘ என அந்த விழாவில் பேசினார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment