மக்களவை தேர்தல் கூட்டணி !! நாளை காலை அறிவிப்பேன்! ஜி.கே.வாசன்

  • தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
  • மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை அறிவிப்பேன் என்று  ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.பின்னர் ஒருவழியாக அது முடிந்து தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  ஆலோசனைக்குப்பின் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை அறிவிப்பேன் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment