எனக்கு தான் ஓட்டு போட்டிங்களா? இரத்தத்தின் மீது சத்தியம் செய்யுங்கள்! மிரட்டிய தோல்வி வேட்பாளர்கள்!

  • ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • இதில் ராமநாதபுரத்தில் ஊராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களை சத்தியம் செய்ய சொல்லி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பதவிகளுக்காகான  தேர்தல் முடிவடைந்து, இந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரியக்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பெண்கள் போட்டியிட்டனர்.

அதில் ஒரு பெண் மட்டும் வென்றுள்ளார். மீதமுள்ள மூன்று பெண்கள் தோல்வி அடைந்து விட்டனர். இந்நிலையில் அந்த மூன்று பெண்களும் தங்கள் பகுதி வாக்காளர்களுக்கு சமுதாய கூடத்திற்கு வரவழைத்து ஒரு சேவலை அறுத்து அதன் இரத்தத்தின் மீது நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என இந்த சேவல் ரதத்தின் மீது சத்தியம் செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தங்களிடம் பணம் வாங்கிவிட்டு யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என இந்த வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் கேட்கின்றனர் என தகவல் பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.