சாராய விற்பனை – 16 காவலர்களை மாற்றம் செய்து டிஐஜி அதிரடி உத்தரவு!

சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் 16 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ பார்த்திபன் உள்ளிட்ட 16 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டனர். சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 16 பேரை திருவாரூர், தஞ்சைக்கு மாற்றி டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார். ஆய்வாளர் கவிதா ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்