சந்தேகத்தால் காதலியை கொன்ற 25 வயது இளைஞன் …!

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டாடேபூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 25 வயது இளைஞன் 23 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்பொழுது வேறொரு ஆணிடமிருந்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞன் தனது காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம்  முற்றி, அவர்களுக்குள் பிரச்சனை வளர்ந்ததால் அந்த இடத்தில் வைத்தே தனது காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
Rebekal