சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார்-ஹெச்.ராஜா

சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு பின்னர்  நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் .தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். அதிக தடுப்பணைகளை கட்ட வேண்டும் .முதலமைச்சரின் இஸ்ரேல் பயணம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.