அமித்ஷா எப்பொழுது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக கருப்பு கொடி-கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

ஜெயலலிதா இருக்கும் போது  அமைச்சர்கள் அடிமையாக இருந்தார்கள் என்று தமிழக  காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழக  காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்தி பரவலாக பேசப்படும் மொழியே தவிர,அனைவராலும் பேசப்படும் மொழி அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காணப்படும் கலாச்சாரம் நம்முடையது. அமித்ஷா எப்பொழுது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி காட்டும் .

இனிமேல் பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படும். ஓலா, உபர் வந்ததால் தான் இரு சக்கர வாகனம் விலை சரிவடைத்தது என்று குழந்தை தனமாக நமது நிதி அமைச்சர் சொல்லும் நிலை வந்துள்ளது.

ஜெயலலிதா இருக்கும் போது  அமைச்சர்கள் அடிமையாக இருந்தார்கள் .இப்பொழுது அவர்கள் கோமாலியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.