தமிழகத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் – கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை. 

காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்கள் தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எனவே புதிதாகவும், இடவசதியோடும், நவீன தொழில்நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும்.

கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை தமிழகத்தின் மையமான திருச்சியில் அமைத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்திட வேண்டும். மேலும், தமிழக அமைச்சரவை கூட்டத்தினை சென்னையில் மட்டும் நடத்தாமல், வேறு ஊர்களிலும் நடத்திட வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment