கார்கில் போர் 20வது ஆண்டு நினைவஞ்சலி! வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் வீரவணக்கம்!

காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் நமது நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இன்று 20வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காஷ்மீர் மற்றும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதே போல டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிர்தியகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.