திமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு.! குஷ்பூவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட எம்.பி கனிமொழி.!

ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.’ என கனிமொழி எம்பி குஷ்பூ டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். 

நேற்று திமுக பிரமுகர் ஒருவர் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் மேடையில் பேசுகையில், பாஜக பெண் பிரமுகர்களான குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை பற்றி விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து, நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஆண்கள் பெண்களை அவமதித்தால், அது அவர்கள் வளர்ந்த விதத்தையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டும். இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பைபை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று அழைத்து கொள்கிறார்கள் என பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, டிவிட்டரில், ‘ ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் இதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க முடியும். ஆனால், எனது தலைவர் மு.க.ஸ்டாலினோ, திமுக கட்சியோ இவரை மன்னிக்க கூடாது .’ என பதிவிட்டுள்ளார் திமுக எம்பி கனிமொழி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment