இலங்கை தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள்.இந்த தாக்குதலில் வெளிநாட்டை சார்ந்த 12பேர் உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு காஜல் அகர்வால் இலங்கை சென்று திரும்பி வந்து உள்ளார். தனது ட்விட்டரில் இலங்கை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த காஜல் அகர்வால் அப்போது தான் இலங்கை சென்றதையும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தெலுங்கில் தெறி பட ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.தற்போது தெறி பட படப்பிடிப்பு தள்ளிப்போனதால் விடுமுறைகாக இலங்கை சென்றார்.
இலங்கையில் புகழ் பெற்ற Bally’s Casino கிளப்பில் அவர் சூதாட்டம் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.