கார்த்தியின் இந்த மூன்று மெகா ஹிட் படங்களும் இவர் கூறி தான் வந்ததாம்! கைதி மேடையில் கார்த்தி ருசிகர பேச்சு!

கார்த்தி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.  ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் நாயகி இன்றி பெரும்பாலும் இரவில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி, இப்படத்தின் கதையை எஸ்,ஆர்.பிரபு தான் என்னிடம் கேட்க சொல்லி அனுப்பினார். அதே போலத்தான் மெட்ராஸ் படத்தையும், தீரன் படத்தையும் எனக்கு பரிந்துரை செய்து இருந்தார். இந்த படத்தில் ஒரு ஹீரோவை சுற்றி கதை நகராது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக இருக்கும்.
இந்த படத்தில் பெருமபாலும் இரவில் தான் எடுத்திருந்தோம். நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அதாவது இந்த படத்தில் லாரி ஒட்டியுள்ளேன். என கலகலப்பாக பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.