#Justnow:”இதனை கேட்டு வருத்தமடைந்தேன்” – ஆளுநர் ஆர்என் ரவி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.இந்த வேளையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.மேலும்,”அனைவரும், பாதுகாப்பாக இருங்கள்,தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.நான் தனிமைப்படுத்திகொண்டேன்” என பதிவிட்டார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும்,அறிக்கை மூலமும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து வருதமடைந்ததாகவும்,அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment