#JustNow: அனுமதியின்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி – மாநில குழந்தைகள் நல ஆணையர்

அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில குழந்தைகள் நல ஆணையர் பேட்டி.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது என்று மாநில குழந்தைகள் ஆணையர் நல சரஸ்வதி தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி மாணவி இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாநில குழந்தைகள் நல ஆணையர் இன்று விசாரணை மேற்கொண்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியுள்ளது. முறையான அனுமதி பெறாத விடுதியில் 24 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனுமதியின்றி பள்ளி விடுதி இயங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என கூறினார். மேலும், முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும். எந்த வழக்காக இருந்தாலும், சிறார்களின் புகைப்படம், பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment