#justnow:சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே,சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால்,கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளதாகவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்,நேற்று வரை சென்னை ஐஐடியில் 1676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,நாளைக்குள் சென்னை ஐஐடியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும்,கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால நாளை முதல் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.