சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த 22 வயது இளைஞன் கைது..!

மும்பையில் உள்ள ஓஷிவாரா பகுதியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் இளம்பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் தனது நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள அமன் கான் என்பவர் மீது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகாரில் அமன் கான் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதாகவும், தவறான முறையில் பேசுவதாகவும் தெரிவித்திருந்துள்ளார்.

தற்பொழுது தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து தனது குடும்ப நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பர்களுக்கு கான் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதை உறுதி செய்துள்ளனர். மேலும், அமன் கான் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

author avatar
Rebekal