முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி மீதமான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

முன்னாள்  அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது தற்போது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இந்த புகாரின் அடிப்படையில், எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment