மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்- ஜார்கண்ட் தேர்தல் குறித்து அமித்ஷா ட்வீட்

  • ஜார்கண்ட் மாநிலத்தில்  தோல்வியை தழுவிய பாஜக,பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி அமைக்கு காங்கிரஸ் கூட்டணி
  • மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன் அமித்ஷா தேர்தல் குறித்து ட்விட்

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளோடும் மற்றும் ஆளும் பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதன் படி கடந்தநவம்பர் 30ந் தேதி முதல் டிசம்பர் 20ந் தேதி வரை 5 கட்டங்களாக  நடைபெற்ற தேர்தலின்  வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்தது.ஆளும் பாஜக பின்  தங்கி இருந்தது.வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளே அதிக இடங்களை பிடித்து பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவரும் ஆகிய அமித்ஷா ட்விட்டரில் மக்களின்  தீர்ப்பை மதிக்கிறோம் 5 ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநில மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு மனமார்ந்த நன்றி. ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும்  என்று ட்வீட் செய்துள்ளார்.

author avatar
kavitha