மொட்டை அடிக்கும் ஜெயம்ரவி! எதற்காக தெரியுமா?

  • படத்திற்காக மொட்டையடிக்கும் ஜெயம் ரவி.
  • படத்திற்காக பழைய கலைகளை கற்றுக் கொள்ளும் பிரபலங்கள். 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், இஸ்ஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகிறது. இந்த படத்திற்காக  தலைமுடியை வளர்க்கவும்,  வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதாபாத்திரத்திற்க்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பதாக தான் துவங்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.