#மறைந்தார் ஜன்வந்த் சிங்- பிரதமர்-ராஜ்நாத் இரங்கல்!!

முன்னாள் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் வயது(82) காலமானார் .இவர்  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய மறைவு பாஜகவிற்கு பெரும் இழப்பாகும்.

இவர் பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர்.அவர் இன்று காலை மறைந்தார்.

முன்னாள் பாதுக்காப்புத்துறை,வெளியுறவுத்துறை,நிதித்துறை அமைச்சராக இருந்த மறைந்த ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கள் செய்தில் பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங். அரசியல்,  சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக நினைவில் நிற்பவர் என்று பதிவிட்டுள்ளார். அதே போல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha