நேரடி விவாதம் நடத்த முதல்வர் தயாரா? – தயாநிதி மாறன் சவால்

ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் பெரியார் தெருவில் அதிமுகவை நிராகரிக்கிறோம் தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய தயாநிதி மாறன், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு ஆதாரம் உள்ளது. ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என குற்றசாட்டினார். நேரடி விவாதம் நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா என சவால் விடுத்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் தான். அதன் பின் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்