#IPL2022: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 27ஆவது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

டெல்லி அணி:

டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.

பெங்களூரு அணி:

ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப்.