ஒரே நாள் 95 கோடி களைக்கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம்.

கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் ஒருநாள் மட்டுமே நடக்க இருக்கிறது. எல்லா அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை, நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அதன் பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

சென்னை,மும்பை உள்ளிட்ட முன்னணி அணிகள் முக்கிய வீரர்களை விடுவிக்க இருப்பதால் ஏலம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Aravinth Paraman

Leave a Comment