IPL 2018:கெயிலின் அதிரடி ஆட்டத்தால் 198 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!!

இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .

முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கெயில் மற்றும் ராகுல் களம் இறங்கினர்.

அதிரடியாக விளையாடிய கெயில் அரை சதத்தை எடுத்த நிலையில் 63 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார் .ராகுல் 37ரன்களிலும் , அகர்வால் 30 ரன்களிலும் ,நாயர் 29 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர் .பிஞ்ச்  முதல் பந்தில் சுருண்டார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment