ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது  டெல்லி உயர்நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இதனிடையே திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர்  சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்றும் இதன் விசாரணை நடைபெற்றது.அதில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.