ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ! ஜாமீன் கேட்டு சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட்  மாதம் 21-ஆம் தேதி   சிபிஐ கைது செய்தனர்.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இன்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்கு முன்னதாக சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு தழுப்படி செய்யப்பட்டது.இந்த நிலையில்  இந்த நிலையில்  ஜாமீன் கேட்டு திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.