விநாயகருக்கு ஏன் எலி வாகனமாக மாறியது தெரியுமா..?அது பற்றிய சுவாரஸ்யமான தகவல் இதோ..!

விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த  காலத்தில் ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உப தேவதையை இருந்தது. அதை  க்ரோன்ச்சா என அழைக்கப்பட்டது. இந்திரனின் அரசவையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் முனிவரின் கால்களை  க்ரோன்ச்சா மிதித்து உள்ளது.

க்ரோன்ச்சா வேண்டுமென்று  தனது கால்களை மிதித்து விட்டதாக எண்ணி அம்முனிவர் எலியாக மாற சாபமிட்டார். இதனைக் கேட்டு க்ரோன்ச்சா அந்த முனிவரின் கால்களில் மண்டியிட்டு கருணை காட்ட வேண்டுமென கூறியது. இதனால் வாமதேவ கோபம் சற்று குறைந்தது.

தன் சாபத்தை திருப்பி வாங்க முடியாது என அவர் கூறினார். ஆனால் நீ விநாயகரின் வாகனமாக விளங்குவாய் என வாமதேவ கூறினார்.வாமதேவ முனிவர் சாபத்தினால் எலியாக மாறி மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது.

இதனால் க்ரோன்ச்சா சாதாரண எலி அல்ல மழையளவு பெரிய உருவம் கொண்டது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் அஞ்ச வைத்தது. இது பலருக்கு தொந்தரவு கொடுத்து பார்க்கும் அனைத்தையும் அழித்து வந்தது.

இந்த நேரத்தில்தான்  பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அப்போது  பரஷர் ரிஷி , அவரது மனைவி வத்சலா கவனித்துக் கொண்டனர்.  க்ரோன்ச்சா பற்றி  கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவு செய்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷாவை எடுத்து  க்ரோன்ச்சா இருக்கும் திசையில் பறக்க விட்டார்.

அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் பரவியது.பின்னர் க்ரோன்ச்சா துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. விநாயகரிடம் மன்னிப்பு கேட்ட க்ரோன்ச்சா அவரின் வாகனமாக பிறகு மாறியது.

author avatar
murugan