INDvsBAN TestSeries: இந்தியா பொறுப்பான ஆட்டம்! உணவு இடைவேளை முடிவில் இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் உணவு இடைவேளை வரை இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு.

இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 41 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இறங்கிய விராட் கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் கிளம்பினார்.

இதனால் இந்திய அணி 48 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாற, புஜாரா மற்றும் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்து வருகின்றனர். ஒருநாள் போட்டி போல் விளையாடி வரும் பந்த் 4 போர்கள் மற்றும் 1 சிக்ஸருடன் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment