பாராலிம்பிக் ஏர் ரைபிள்;நூழிலையில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் …

பாராலிம்பிக் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கர் பதக்க வாய்ப்பை இழந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை நடைபெற்ற பாராலிம்பிக் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் 615.2 மதிப்பெண்களுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கர்  மொத்தமாக கடைசி 8 காட்சிகள் வரை முன்னணியில் இருந்தார், இறுதியில்,மொத்தமாக 203.9 புள்ளிகள் எடுத்து 4 வது இடத்தைப் பிடித்து,நூழிலையில் பதக்க வாய்ப்பை இழந்தார்.ஏனெனில்,கொரியாவின் ஜின்ஹோ பார்க் 224.5 புள்ளிகளில் வெண்கலம் வென்றார். மேலும்,இதில்,சீனா வீரர் டாங் தங்கப்பதக்கம் வென்றார்.

முன்னதாக,இன்று காலை நடைபெற்ற இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.