அரசு வேலை கேட்டு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் – மாரியப்பன்

அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் நம்பிக்கை. டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், பதக்கம் வென்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை தங்கத்தை எதிர்பார்த்து சென்றேன். ஆனால், மழை பெய்ததால் சற்று இடையூறு ஏற்பட்டது. அதனால், வெள்ளி பதக்கம் வென்றதாக தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன். … Read more

பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் அரையிறுதிக்கு தகுதி!

டோக்கியோ பாராலிம்பிக் பேட் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு தகுதி. இந்திய பாரா-பேட்மிண்டன் நட்சத்திர வீரருமான கிருஷ்ணா நாகர் தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் SH6 பிரிவில் B குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். குரூப் சுற்றில் பிரேசில் வீரர் விட்டோரை 21-17, 21-14 என்ற நேர் செட் புள்ளிகளில் வீழ்த்தி, இந்திய வீரர் அரையிறுதிக்கு … Read more

மகிழ்ச்சி….பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 11 வது பதக்கம்;பிரவீன் குமார் அசத்தல்…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். இப்போட்டியில்,பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில்,பிரவீன் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.எனினும்,2.07 மீ தாண்டியதன் … Read more

பாராலிம்பிக்ஸ் படகுபோட்டி – முதல் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு முன்னேற்றம்…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுபோட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில், 2 தங்கம் , 5 வெள்ளி , 3 வெண்கலம் வென்றுள்ளனர். இந்நிலையில்,டோக்கியோவில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ்  துடுப்பு படகுப்போட்டி (கேனோ ஸ்பிரிண்ட்) மகளிர் ஒற்றையர் 200 மீ விஎல் 2 ஹீட் 1 … Read more

பதக்க வேட்டையில் இந்தியா; சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்று சாதனை..!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்நிலையில்,இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா 216.8 மதிப்பெண்களைப் பெற்று வெண்கலப் பதக்கம் … Read more

பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல்;பதக்க வாய்ப்பை இழந்த இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ்..!

பாராலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பதக்க வாய்ப்பை இழந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, இன்றுகாலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,அதன்பின்னர் நடைபெற்ற பி 2 மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில்  ரூபினா … Read more

“பாராலிம்பிக்கில் சுமித் அண்டில் சாதனை;நாட்டிற்கு பெருமை” – பிரதமர் மோடி வாழ்த்து..!

பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித்,பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதனால்,டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் தங்கம் பதக்கம் வென்றார். ஏற்கனவே, மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை … Read more

பாராலிம்பிக்:அவனி லெகாராவால் மீண்டும் ஒலித்த இந்திய தேசிய கீதம் – நீரஜ் சோப்ரா வாழ்த்து…!

அவனி லெகாரா தங்கம் வென்றதன் காரணமாக பாராலிம்பிக் பதக்க நிகழ்வில் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலம் வென்றது. இதனையடுத்து,இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில்,பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் … Read more

அதிர்ச்சி…பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு நேர்ந்த சோகம்.!

பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று,முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார்.அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார். இதனைத் தொடர்ந்து,நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரமும், ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக … Read more

பாராலிம்பிக் ஏர் ரைபிள்;நூழிலையில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் …

பாராலிம்பிக் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கர் பதக்க வாய்ப்பை இழந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை நடைபெற்ற பாராலிம்பிக் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் உன்ஹல்கர் 615.2 மதிப்பெண்களுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 இறுதிப் போட்டியில் … Read more