உலகக்கோப்பை :டாஸ் வென்றது இந்திய அணி ..! 2 வீரர்கள் விளையாடவில்லை..!

உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.இதற்காக அணிகள் எல்லாம் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.

சவுதம்டனில் இந்திய மற்றும் நியுசிலாந்து இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.அதில் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன்  வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதும் போட்டியானது துவங்கி உள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய அணி சார்பில் 13 பேர் விளையாடுகின்றனர்.நேற்று விஜய் சங்கர் பயிற்சியின் போது காயம் அடைந்த நிலையில் அவர் இன்று  போட்டியில் விளையாட வில்லை.மேலும் அவரோடு கேதார் ஜதாவ்_வும்  இன்று போட்டியில் விளையாடவில்லை.

நியூசிலாந்து அணி சார்பாகவும் 13 பேர் விளையாடுகின்றனர்.அந்த அணியில் மேட் ஹான்றி  மற்றும் டாம் லத்தம் ஆகியோர் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
kavitha

Leave a Comment