பஞ்சாப் சுயேட்சை வேட்பாளருக்கு ஏற்பட்ட நிலைமை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதியில்  சுயேச்சை வேட்பாளராக  போட்டியிட்ட நீது ஷட்ரன் லாலா.இவர் தேர்தலில் வெற்றிபெற இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில்,நேற்று வெளியான  தேர்தல் முடிவில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாக்கு எண்ணும் மையத்தியிலே கதறி அழுதார்.மேலும்,அவர் கூறுகையில் மக்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும்,எங்கள் வீட்டிலேயே மொத்தம் 9 வாக்குகள் உள்ள நிலையில் எனக்கு 5 வாக்குகள் மட்டும் விழுந்துள்ளது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment