பாகிஸ்தான் எல்லையில் இந்தியா தாக்குதல்!!சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம் !!ஐரோப்பிய யூனியன்

  • பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை.
  • இந்தியா – பாக்கிஸ்தான்  இடையே நிலவும் சூழ்நிலையை கண்காணித்து வருவதோடு, இரு நாடுகளுடனும் இது குறித்து பேசி வருகிறோம் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. 

கடந்த 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை  தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட்,  முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள  தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும்  விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.

Image result for surgical strike

ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,இந்தியா – பாக்கிஸ்தான்  இடையே நிலவும் சூழ்நிலையை கண்காணித்து வருவதோடு, இரு நாடுகளுடனும் இது குறித்து பேசி வருகிறோம்.இருநாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை தணிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதே தற்போது அவசியமாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment