தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை.! திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.!

தமிழகத்தில் திமுக அரசை கண்டித்து, பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் சென்னையில் வள்ளுவர்கோட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் மற்றும், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பாஜகவினர் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 690 பள்ளிகள் தமிழை முதல் மொழியாக படிக்காமல் மற்ற மொழிகளை கற்பித்து வருகின்றனர். இதனால் தமிழே படிக்காமல் பல மாணவர்கள் கல்லூரி படிப்பு வரையில் செல்கின்றனர். என்றும்,

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கையில் ஹிந்தி மொழிக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும், கூறி திமுக அரசுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment