#Breaking:மக்களே கவனம்…சற்று குறைந்த தொற்று;ஆனால்,ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த கொரோனா பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,710 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 2,685 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,50,215 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 14 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,572ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,158 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,09,335  ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,93,13,41,918 கோடி பேருக்கு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 14,39,466 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment