யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு – அண்ணாமலை

என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை என அண்ணாமலை பேட்டி. 

இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்க்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா அவர்கள் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டு இருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடர் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை. அவரை விட நான் கருப்பு. அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இதுபோன்ற கேள்விகளுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.